தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி

தாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 13-08-2018 | 10:26 AM
தாய்வானின் நியூ தய்பேய் நகரில் (New Taipei City) உள்ள வைத்தியசாலையில் பரவிய தீயில் சிக்கி குறைந்தது 9 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நோயாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. இன்று (13) காலை வைத்தியசாலையின் 7ஆவது மாடியிலுள்ள வாட்டில் (Ward) தீ பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது. தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் தெரியாதபோதிலும், நகரக்கூடிய கட்டில் ஒன்றில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறினால் தீ பரவ ஆரம்பித்திருக்கலாம் என ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன. 2012ஆம் ஆண்டு குறித்த வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயால் 12 நோயாளர்கள் பலியானதோடு, குறைந்தது 60க்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.