பதுளை - கொக்கோவத்தை தீ விபத்தில் ஒருவர் பலி

பதுளை - கொக்கோவத்தை தீ விபத்தில் ஒருவர் பலி

by Staff Writer 12-08-2018 | 8:11 AM
Colombo (News 1st) பதுளை - கொக்கோவத்தை வீதியிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் பரவிய தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் இன்று (12) அதிகாலை 1.45 மணியளவில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், கட்டடத்திற்குள்ளிருந்த 46 வயதான ஒருவர் தீக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கட்டடத்தில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. குறித்த தீ சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.