திருமலை - மூதூர் விபத்தில் சிறுமி பலி !

திருமலை - மூதூர் விபத்தில் 4 வயது சிறுமி பலி

by Staff Writer 12-08-2018 | 7:38 AM
Colombo (News 1st) திருகோணமலை - மூதூர், செல்வநகர் பகுதியில் லொறி ஒன்று மோதியதில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூதூர் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 4 வயதான சிறுமி ஒருவர் இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பில், சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.