by Staff Writer 11-08-2018 | 8:02 PM
Colombo (News 1st) துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நாளை (12) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் நடைபெறவுள்ளது
இதன் பிரகாரமே ஹஜ்ஜூப் பெருநாள் தீர்மானிக்கப்படவுள்ளது.
உலகவாழ் முஸ்லிம்கள் துல் ஹஜ் 10 ஆம் நாள் ஈதுல் அல்ஹா எனப்படும் தியாகத்திருநாளான ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.