போதை வில்லைகளுடன் தம்பதியினர் கைது

போதை வில்லைகளுடன் தம்பதியினர் கைது

by Staff Writer 11-08-2018 | 10:53 AM
Colombo (News 1st) வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் 70,000 போதை வில்லைகளுடன் இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று (11) அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பகுதியை சேர்ந்த 24 மற்றும் 18 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, சந்தேகநபர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, பேலியகொடை பகுதியில் 10 கிராம் 700 மில்லி கிராம் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.