by Staff Writer 11-08-2018 | 10:25 PM
Colombo (News 1st) தென் ஆபிரிக்காவிற்கு எதிராக நாளை (12) நடைபெறவுள்ள ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பாகத் தயாராகியுள்ளதாக இலங்கை அணியின் தலைமை பயிற்றுநரான சந்திக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நாளை பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
காணொளியில் காண்க...