உத்தேச பஸ் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

திட்டமிடப்பட்ட உத்தேச பஸ் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

by Staff Writer 11-08-2018 | 6:42 AM
Colombo (News 1st) ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் திட்டமிடப்பட்ட உத்தேச பஸ் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல விடயங்களை முன்நிறுத்தி, நாளை (12) நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபட அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது. இந்நிலையில், நேற்று பிற்பகல் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து, பகிஷ்கரிப்பைக் கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித குமார் தெரிவித்துள்ளார்.