வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு பிணை

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 10-08-2018 | 5:06 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்கள கட்டடம் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்ப்படுத்திய போது பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்றொழில் திணைக்கள கட்டடம் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த இடத்தில் மாகாண சபை உறுப்பினரும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இன்று மாலை 3 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் சுறுக்குவலை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2 ஆம் திகதி மாவட்ட கடற்றொழில் திணைக்கள வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில் திணைக்களத்தினருடன் பலத்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடற்றொழில் திணைக்கள கட்டடம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.