சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளது

சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்படவுள்ளது

by Staff Writer 10-08-2018 | 4:10 PM
Colombo (News 1st) சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயமாக அமைந்தால், இந்த உடன்படிக்கைக்கு எவ்விதத்திலும் ஆதரவளிக்கப் போவதில்லை என அமைச்சர் கூறியுள்ளார். இதன் காரணமாக சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.