எரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு

by Bella Dalima 10-08-2018 | 4:04 PM
Colombo (News 1st) எரிபொருள் விலை இன்று (10) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் 2 ரூபாவாலும் சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 1 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்திற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோலட் 157 ரூபாவுக்கும் சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் தற்போது நிதியமைச்சில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கமைய, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை சூத்திரம் திருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய, மீண்டும் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சாதாரண பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.