English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
10 Aug, 2018 | 5:06 pm
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்கள கட்டடம் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்ப்படுத்திய போது பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்றொழில் திணைக்கள கட்டடம் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த இடத்தில் மாகாண சபை உறுப்பினரும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இன்று மாலை 3 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுறுக்குவலை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2 ஆம் திகதி மாவட்ட கடற்றொழில் திணைக்கள வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கடற்றொழில் திணைக்களத்தினருடன் பலத்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடற்றொழில் திணைக்கள கட்டடம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 Jul, 2022 | 05:50 PM
02 Jul, 2022 | 04:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS