by Chandrasekaram Chandravadani 09-08-2018 | 10:47 AM
ரஷ்யா மீது மேலும் பல புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் முன்னாள் உளவுப் பிரிவு அதிகாரி சேர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது, கடந்த மார்ச் மாதம் இரசாயன நச்சுவேதிப்பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலுடன் ரஷ்யாவுக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக பிரித்தானிய குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், குற்றச்சாட்டை மொஸ்கோ உறுதியாக மறுத்துள்ளது.
இந்த விடயத்தில், ரஷ்யா மீதான மேலும் பல புதிய தடைகளை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று (08) வௌியிட்ட அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.