பொதுசுகாதார பரிசோதகரை கொலை செய்தவருக்கு கடூழியசிறை

பொது சுகாதார பரிசோதகரை உலக்கையால் தாக்கிக் கொன்றவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 09-08-2018 | 4:56 PM
Colombo (News 1st)  திருகோணமலை - தம்பலகாமம், சாலியபுர பகுதியில் பொது சுகாதார பரிசோதகரைத் தாக்கி கொலை செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நுளம்பு ஒழிப்பு செயற்பாட்டிற்காக சென்றிருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது குற்றவாளி உலக்கையால் தாக்கியுள்ளார். இதன் போது தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஏனைய செய்திகள்