தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் உபதலைவர் கைது

தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் உபதலைவர் கைது

by Staff Writer 09-08-2018 | 12:02 PM
Colombo (News 1st) பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் உபதலைவர் லெட்சுமன் பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (09) காலை 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றியமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிடியாணை தொடர்பில் ஹட்டன் பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, தலவாக்கலை பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.