பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

கோரமின்மையால் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

by Bella Dalima 09-08-2018 | 6:16 PM
Colombo (News 1st)  கோரமின்மையால் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் நாளை (10) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஊடகங்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா ஒத்திவைப்பு வேளை பி​ரேரணையொன்றை சமர்ப்பிக்கத் தயாரான சந்தர்ப்பத்தில் கோரமின்மையினால் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.