உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்: ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கம்
by Staff Writer 09-08-2018 | 4:46 PM
Colombo (News 1st) தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்தார்.
ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி மீண்டும் கிடைக்கும் வரையில் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.