ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

by Staff Writer 09-08-2018 | 4:37 PM
Colombo (News 1st) ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவரை கொலை செய்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிரதிவாதிக்கு காலி மாகாண மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. காலி மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ணவினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் கோதாகொட பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஒருவரை ஆயுதமொன்றால் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொலைச்சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தாக்குதலுக்கு இலக்கானவர் நிராயுதபாணியாக இருந்துள்ளதுடன், உயிர் போகும் தருவாயில் தமது தாய்க்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பான சாட்சி ஏனைய சாட்சி விசாரணைகளின் போது நிரூபணமாகியுள்ளதாக காலி மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ண தெரிவித்துள்ளார்.