ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில் சாரதிகள் மற்றும் பாதுகாவலர்களை உள்ளடக்கிய பல தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 08-08-2018 | 3:39 PM
Colombo (News 1st) சம்பளப் பிரச்சினையை முன்வைத்து ரயில் சாரதிகள் மற்றும் பாதுகாவலர்களை உள்ளடக்கிய பல தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. பிற்பகல் 3 மணியளவில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது. தமது கோரிக்கைகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகவும் இலங்கை ரயில் பாதுகாவலர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் சீ.எம்.பீ. பீரிஸ் தெரிவித்தார். 3 மணிக்கு பின்னர் கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்களின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.