by Staff Writer 08-08-2018 | 8:18 AM
Colombo (News 1st) முல்லைத்தீவு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பிச் சென்றுள்ளர்.
நேற்று (07) மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போதே, கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.