புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளலாம்

நாட்டின் அபிவிருத்திக்கு  புலம்பெயர் மக்களின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்: இராணுவத் தளபதி  

by Bella Dalima 08-08-2018 | 9:28 PM
Colombo (News 1st) நாட்டின் அபிவிருத்திக்காக வௌிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்திகளை முன்னெடுக்க மேற்கத்தேய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை பயன்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு மாநாடு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நேற்று (07) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மேலதிக தகவல்களை காணொளியில் காண்க...