சட்டவிரோத பயணம்: 21 இலங்கையர்களுக்கு விளக்கமறியல்

பிரான்ஸை அண்மித்த ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாகப் பயணித்த 21 பேருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 07-08-2018 | 6:17 PM
 Colombo (News 1st)  பிரான்ஸை அண்மித்த ரீயூனியன் தீவை நோக்கி சட்டவிரோதமாகப் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 21 பேரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கோட்டை மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் பெண்கள் இருவரும் அடங்குகின்றனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.