by Staff Writer 07-08-2018 | 8:10 AM
Colombo (News 1st) நுகர்வோர் சேவை சட்டமூலம் திருத்தியமைக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், திருத்தங்கள் சில மேற்கொள்ளப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் அருன மெதகொட தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக அது சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையில் சில வர்த்தகர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கு இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.