by Staff Writer 07-08-2018 | 6:42 AM
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்னரே எதுவும் கூறமுடியும் என அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கருணாநிதியின் உடல்நிலை தொடர்பில் அவர் சிகிச்சை பெற்று வரும் தனிார் மருத்துவமனை விடுத்துள்ள அறிக்கையில், வயோதிபத்தின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயற்பட வைப்பது சவாலான விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களில் மருத்துவ உதவிகளுக்கு அவரது உடல் வழங்கும் ஒத்துழைப்பைப் பொறுத்தே அவருடைய உடல் நிலை குறித்து அறிவிக்க முடியுமென வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவரின் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக 10 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல் செயற்பாடு மற்றும் இரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி வைத்தியசாலையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியசாலை அறிக்கை வௌியிட்டிருந்தது.
இந்நிலையில், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.