பதுளை - பசறையில் பெண் ஒருவர் கொலை

பதுளை - பசறையில் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

by Staff Writer 06-08-2018 | 9:43 AM
Colombo (News 1st) பதுளை - பசறை மீரியபெத்த பகுதியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 40 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில், குடும்பத் தகராறு காரணமாக கணவரால், மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பில் 65 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (06) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.