புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கடற்படையினர் வசம்

சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கடற்படையால் முற்றுகை

by Staff Writer 06-08-2018 | 1:40 PM
Colombo (News 1st) சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் 21 பேரை ஏற்றிச்சென்ற படகொன்று, கொழும்பு கடற்பிராந்தியத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து 117 கடல் மைல் தூரத்தில் குறித்த படகு கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த படகில் 2 பெண்களும் பயணித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார். கடற்படையினரின் தொடர் கண்காணிப்பையடுத்து, புகலிடக்கோரிக்கையாளர்களின் இந்தப் படகு முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்பின்னர், படகில் பயணித்த 21 பேரும் கைது செய்யப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகக் கொமாண்டர் தினேஸ் பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.