கிளி. அரச வங்கியின் திறப்பு திருட்டு

கிளிநொச்சியிலுள்ள அரச வங்கி ஒன்றின் திறப்பு திருட்டு

by Staff Writer 06-08-2018 | 12:24 PM
Colombo (News 1st) கிளிநொச்சி நகரிலுள்ள அரச வங்கி ஒன்றின் திறப்பு இன்று (06) காலை திருடப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணியளவில், பொலிஸ் நிலையத்திலிருந்து எடுத்துச்செல்லும்போது திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சைக்கிளில் வந்த ஒருவரால் குறித்த திறப்பு திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.