பேஸ்புக்கால் வந்த வினை!

பேஸ்புக்கால் வந்த வினை!

by Staff Writer 05-08-2018 | 9:38 PM

வாத்துவ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் நேற்றிரவு நடைபெற்ற களியாட்ட நிகழ்வின்போது, சுகயீனமுற்ற மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு ஆரம்பமான களியாட்ட நிகழ்வு, இன்று அதிகாலை வரை நடைபெற்றுள்ளது. தனியார் நிறுவனமொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். களியாட்ட நிகழ்விற்கு சமூக வலைத்தளமூடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இளைஞர், யுவதிகள் இதில் கலந்துகொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் இருவர் இன்று முற்பகல் உயிரிழந்ததுடன், மற்றுமொரு இளைஞர் இன்று மாலை உயிரிழந்தார். 36, 31 மற்றும் 20 வயதுகளை உடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மற்றைய இளைஞர் பாணந்துரை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.