வைத்தியர்களின் பகிஷ்கரிப்பு இன்றுடன் நிறைவு

வைத்தியர்களின் பகிஷ்கரிப்பு இன்றுடன் நிறைவு

by Staff Writer 04-08-2018 | 6:54 AM
Colombo (News 1st) அரச வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றுடன் நிறைவடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், நேற்று (03) காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேர பகிஷ்கரிப்பு, இன்று (04) காலை 8 மணியுடன் நிறைவடையும் எனக் கூறப்பட்டுள்ளது. அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியதோடு, பல வைத்தியசாலைகளில் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.