விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் மரணம்

திருட்டுக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு

by Staff Writer 04-08-2018 | 11:20 AM
Colombo (News 1st) தங்காபரணமொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை தெற்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மில்லனிய பகுதியை சேர்ந்த 37 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சந்தேகநபர், ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதேவேளை, பொலிஸாரின் தாக்குதலாலேயே தமது கணவர் உயிரிழந்துள்ளதாக சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார். சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.