ஐஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ''ஐஸ்'' போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

by Staff Writer 03-08-2018 | 4:14 PM
Colombo (News 1st) கொழும்பு - கோட்டை பகுதியில் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 878 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.