by Staff Writer 03-08-2018 | 8:18 PM
Colombo (News 1st) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உறுப்பினராக செயற்படுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி பி.பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வாக்காளராக பதிவு செய்யப்படாத ஒருவர் என தெரிவித்து, அவர் மாநகர சபை உறுப்பினராக செயற்படுவதை தடை செய்யுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தோல்வியடைந்த போதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பட்டியலின் கீழ் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.