யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது

by Staff Writer 03-08-2018 | 4:36 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18, 19, 20, 21, 22 ,29 வயதான இளைஞர்களே குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 7 பேரும் மானிப்பாய், உடுவில், சுன்னாகம், அளவெட்டி, ஆணைக்கோட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.