Colombo (News 1st) கொழும்பிலிருந்து 330 கிலோமீட்டர் தூரத்திலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று (02) பிற்பகல் ஆலங்கட்டி மழை பொழிந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பொழிந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை ஆலங்கட்டி மழை பொழிந்ததாக பிரதேச மக்கள் கூறினர்.