பொலிஸாரால் தேடப்படும் கூகுடி கண்ணாவின் தந்தை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு
by Bella Dalima 03-08-2018 | 3:57 PM
Colombo (News 1st) கொழும்பு முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த கோபாலப்பிள்ளை பாலச்சந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரியால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
முகத்துவாரத்தை சேர்ந்த 62 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் தேடப்படும் கூகுடி கண்ணா என்பவரின் தந்தையே துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.