புத்தளத்தில் திமிங்கிலம் கரையொதுங்கல்

புத்தளம் - தலுவ கடற்கரையோரத்தில் திமிங்கிலமொன்று கரையொதுங்கியது

by Staff Writer 03-08-2018 | 7:51 PM
Colombo (News 1st)  புத்தளம் - கற்பிட்டி, தலுவ கடற்கரையோரத்தில் திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது. தலுவ கடற்கரையோரத்தில் திமிங்கலமொன்று இறந்த நிலையில் காணப்படுகின்றமையை அவதானித்த மக்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். சுமார் 25 அடி நீளமான இந்த திமிங்கிலம் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறியதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, புத்தளம் - ஆலங்குடா கடற்கரையோர பகுதியில் இறந்த நிலையில் கடந்த மாதம் 16 ஆம் திகதி திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.