வவுனியா சதொச தற்காலிகமாக மூடல்

சீனியில் யூரியா கலப்பு: வவுனியா சதொச தற்காலிகமாக மூடல்

by Staff Writer 03-08-2018 | 4:28 PM
Colombo (News 1st)  வவுனியா சதொச விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சீனியில் தவறுதலாக யூரியா கலக்கப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் சதொச விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் (02) ஊழியர் ஒருவரால் யூரியா உரம் தவறுதலாக சீனி மூடைக்குள் கொட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொதுசுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.