மாணவர்களின் விசா மோசடி குறித்து பரிசீலனை

விண்ணப்பித்த மாணவர்களின் விசா மோசடி குறித்து பரிசீலனை

by Staff Writer 02-08-2018 | 2:19 PM
Colombo (News 1st) விசா மோசடி தொடர்பான விடயங்கள் வௌிக் கொணரப்பட்டதைத் தொடர்ந்து, விண்ணப்பிக்கப்பட்ட 800 மாணவர்களின் நியூஸிலாந்து விசாக்களை நியூஸிலாந்து குடிவரவுத் துறை பரசீலிக்கின்றது. இலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றினால் போலி விண்ணப்பங்களைத் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி அவர்களுக்கு விசாவைப் பெற்றுக் கொடுப்பதற்காக பணம் பெற்றுக் கொள்வதாக சர்வதேச ஊடகம் வௌிக்கொணர்ந்தது. மும்பையிலுள்ள நியூஸிலாந்து குடிவரவு அலுவலகத்தினால் இலங்கைக்கான விசா விண்ணப்பங்கள் கையாளப்பட்டு வருகின்ற நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் விசா மோசடி தொடர்பில் இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.