கடன்பெற்றவர் தொடர்பில் விசாரிக்குமாறு உத்தரவு

மக்கள் வங்கியில் கடன் பெற்ற பணிப்பாளர் தொடர்பில் விசாரிக்குமாறு லக்‌ஷ்மன் கிரியெல்ல உத்தரவு

by Bella Dalima 02-08-2018 | 9:54 PM
Colombo (News 1st)  மக்கள் வங்கியின் பணிப்பாளர் ஒருவர் தமது நிறுவனத்திற்காக கடன் பெற்றமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக அரச தொழில் முயற்சி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டதாகவும், இதனை வௌிக்கொணர்ந்தமைக்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். இதன் உண்மைத் தன்மையை அறிய அமைச்சின் செயலாளர், மக்கள் வங்கியின் தலைவருக்கு விரைவில் அறிக்கையொன்றை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.