by Staff Writer 01-08-2018 | 6:35 AM
Colombo (News 1st) வெல்லவாய - கொடவெஹெரகல பகுதியில் பரவிய காட்டுத்தீ காரணமாக 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
நேற்று (31) மாலை காட்டுத்தீ பரவியுள்ளதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனுராதபுரம் - மள்வத்து ஓய வனப்பகுதியிலும் நேற்று மாலை காட்டுத்தீ பரவியுள்ளது.
தற்போது நிலவிவரும் வெப்பமான காலநிலை காரணமாக காட்டுத்தீ பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம் மாநகர சபையின் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ காரணமாக 10 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.