Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. அரச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஆளணிக்கு
மேலதிகமாக உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொண்டு சம்பளம் வழங்கத் தடை விதித்து சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.
02. நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்துவரும் அமெரிக்காவிற்கான
முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.
03.
தமது உப்பளம் அமைந்துள்ள பூர்வீகக் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரி சங்கத்தினர் நேற்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
04.
மன்னார் சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக, அமெரிக்காவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
05. கண்டி – கொஹாகொட குப்பைமேடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொட்டப்படும் கழிவுப்பொருட்கள் காரணமாக
மகாவலி கங்கை பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்
01. ஈரானுடன் நிபந்தனைகள் ஏதுமின்றி அவர்களுக்குத் தேவையான நேரத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
02. புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கட்டமைக்கும் பணியில் வட கொரியா ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
03. செவ்வாய்க்கிரகம், 15 வருடங்களிற்கு பின்னர் தனது சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
01. ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக தம் மீதும் முன்னாள் அணித்தலைவரான அரவிந்த டி சில்வா மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரான அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார்.