எழுச்சி பெறும் பொலன்னறுவை செயற்திட்டம் கையளிப்பு

எழுச்சி பெறும் பொலன்னறுவை அபிவிருத்தி செயற்திட்டம் மக்களிடம் கையளிப்பு

by Staff Writer 01-08-2018 | 8:53 PM
Colombo (News 1st)  'எழுச்சி பெறும் பொலன்னறுவை' அபிவிருத்தி செயற்திட்டத்தின் 180 திட்டங்களை மக்கள்மயப்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பொலன்னறுவை அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சில அபிவிருத்தி திட்டங்கள் இன்று காலை திவுலன்கடவெல மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது மக்களிடம் கையளிக்கப்பட்டன. 16 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.