67 இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிப்பு

67 இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிப்பு

by Staff Writer 31-07-2018 | 12:02 PM
Colombo (News 1st) சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கு அமைய 67 இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 124 பேரின் மீன்பிடிப் படகுகளே நேற்று (30) விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி காரைநகர் இறங்குதுறைமுக பகுதியில் 38 படகுகள் விடுவிக்கப்பட்டதுடன், 29 ஆம் திகதி 2 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் 67 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.