மாத்தளையில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்

மாத்தளையில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயம்

by Bella Dalima 31-07-2018 | 3:13 PM
Colombo (News 1st)  மாத்தளை - மடவல, உள்பத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையிலிருந்து பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர் திசையில் மாத்தளையிலிருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஹாவெல பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.