பியகமவில் 15 மணி நேர நீர்வெட்டு

பியகமவில் 15 மணி நேர நீர்வெட்டு

by Chandrasekaram Chandravadani 31-07-2018 | 9:09 AM
பியகம பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று (31), 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், இன்று காலை 9 மணிமுதல் இரவு 12 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எல்பொட, மள்வானை, தொம்பே, பியகம வடக்கு, கந்துகொட ஆகிய பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.