விமான நிலையங்களிற்கருகில் பட்டம் பறக்கவிட முடியாது

விமான நிலையங்களிற்கு அருகில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 30-07-2018 | 4:54 PM
Colombo (News 1st) விமான நிலையங்களிற்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையங்களிலிருந்து 5 கி.மீ. எல்லைக்குள் பட்டங்களைப் பறக்கவிடுவது சட்டவிரோதமானது என்பதுடன் தண்டனைக்குரிய குற்றமெனவும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. பட்டங்களைப் பறக்கவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் நூல் சிக்குவதால், விமானத்தின்  பல்வேறு பாகங்களிற்கு பாதிப்பு ஏற்படுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரசபை மேலும் கூறியுள்ளது. இதனால், பட்டங்களைப் பறக்கவிடும்போது அதிக அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.