நவாஸ் ஷெரிப் வைத்தியசாலையில் அனுமதி

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 30-07-2018 | 7:30 AM
சிறை வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இருதயக் கோளாறு காரணமாக இஸ்லாமாபாத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நவாஸ் ஷெரிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, நவாஸ் ஷெரிப் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என வலியுறுத்தி பெருமளவிலான ஆதரவாளர்கள் பூச்செண்டுகளுடன் வைத்தியசாலை வட்டாரத்தில் காத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.