by Staff Writer 29-07-2018 | 9:19 PM
முல்லைத்தீவு - கல்விலாங்குளத்தில் நீரின்மையால் 600 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்திவு மாவட்டத்தில் - துணுக்காய் - கல்விலாங்குளம் பகுதியில் நீர் வற்றியுள்ளமையால் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கல்விலாங்குளத்தின் நீர்தேக்கம் குறைவடைந்தமையால் கடந்த இரு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கல்விலாங்குளத்தில் தற்போது கால்நடைகள் குடிப்பதற்கு மாத்திரம் நீர் காணப்படுகின்றது.
கடந்த சில வருடங்காளாக மழைவீழ்ச்சி குறைவடைந்தமையால் குளத்திற்கான நீர் வருகை குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கல்விளாங்குளத்து நீரினை நம்பி சுமார் 600 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை 3 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.