by Staff Writer 29-07-2018 | 9:12 PM
இலங்கை தேசிய மட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வட மாகாணத்தின் முதல் வீரராக விஜயகாந்த் வியாஷ்காந்த் பதிவானார்.
இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்மான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வியாஷ்காந்த் அறிமுகமானார்.
இதன் மூலம் வட மாகாணம் சார்பாக இலங்கை கிரிக்கெட் தேசிய அணிக்காக விளையாடிய முதல் வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
இந்திய இளையோர் அணிக்கு எதிரான போட்டியில் தனது சுழற்பந்து வீச்சின் மூலம் வியாஷ்காந்த் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.