கொழும்பில் 9 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பில் 9 மணித்தியால நீர் வெட்டு

by Staff Writer 28-07-2018 | 2:18 PM

கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் ஒன்பது மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் வௌ்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸ், இரத்மலானை, களுபோவில, நெதிமால, நுகேகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அம்பத்தலே நீ்ர் சுத்திகரிப்பு நிலையம் முதல் தெஹிவளை வரையான நீர்விநியோக குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.