Colombo (News 1st) நாட்டின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 3 முதல் 4 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் அதிக வெப்பநிலையாக 36.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை நேற்று (27) பதிவாகியதாக
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் வற்றிய நிலையில் காட்சியளிக்கின்றன.